அனைவருக்கும் வணக்கம்.என்னுடைய முதல் பதிவை வெற்றி பதிப்பாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக நண்பர் ரபிஃக் ராஜா அவர்களுக்கும் முத்து விசிறி அவர்களுக்கும், ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்களுக்கும்..... அட இப்படி சொல்லிக் கொண்டே போனால் கமெண்ட் இட்ட அனைவரையும் குறிப்பிட வேண்டும், அது சற்று சிரமமான காரியம் என்பதால் இந்த மூவர்க்கு மட்டும் எனது சிறப்பு நன்றிகள்.
பதிவுலக நண்பர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எனக்கு இனையதளங்களில் பிரவுஸ் பண்ண வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே முடிகின்ற காரணத்தினால் அவரவர் பதிவுகளில் என்னால் உடனுக்குடன் கமெண்ட் இட இயலாது. அதுவும் இல்லாமல் என்னால் அடிக்கடி பதிவும் இட இயலாது. மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று பதிவுகள் வரை இட முயற்சி செய்கிறேன். (மாதமிருமுறை என்பதே சரியாக இருக்கும்). ஆகையால் தயைகூர்ந்து எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்.
பொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.