Sunday, November 22, 2009

தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முரட்டுக்காளை கார்த் சாகசம்

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

உயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். நெடு நாட்களாக வனவாசம் சென்றிருந்த நான் இப்போது தான் திரும்பி வந்து உள்ளேன். தடங்கலுக்கு மன்னிக்கவும் என்று அந்த காலத்தில் தொலைக்கட்சியில் சொல்வது போலத்தான் நானும் சொல்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் தொடர்ந்து பதிவிட முயல்கிறேன். இனி பதிவுக்கு செல்வோமா?

கதை ஆரம்பிப்பது இப்படித்தான். நரக மண்டல தலைமையகத்தில் சாத்தானும் அவருடைய சகாக்களும் பூமியை எப்படி அழிக்கலாம் என்று கார்பரேட் மீட்டிங் நடத்தி ருபெயோ என்ற கொடிய சாத்தானிடம் பூமியை அழிக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர். பூமிக்கு வரும் ருபெயோவை இங்கிலாந்து போலீசார் விசாரிக்க, அதனால் கோபப்படும் அந்த கொடிய சாத்தான் அவர்களின் வாகனத்தை அழிக்கிறான். இதன் மூலம் அவனுடைய சக்திகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றனர்.

கதையின் நாயகன் காரத்தை சந்திக்கும் சாத்தான் அவனை தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் கொன்று விடுகிறான், அதுவும் கதையின் ஆரம்பத்திலேயே. அப்படியானால் இனிமேல் என்ன நடக்கும்? பூமியை காப்பாற்றுவது யார்? கார்த் கதி என்ன? பிறகு தன்னுடைய பூமி அழிக்கும் பணிக்காக மாற்று மருந்தே இல்லாத ஒரு கொடிய வைரஸ் கிருமி அடங்கிய குப்பியை அதனை கண்டு பிடித்த விஞ்சானியிடம் இருந்து பறித்துக் கொள்கிறான் சாத்தான்.

இனிமேல் என்ன நடக்கும்?

கார்த் கதி என்ன?

கார்த் பிழைப்பானா?

அந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி?

பூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்?

அழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி?

இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

 

0
01
02
03
04
05
06
07
08
09
10
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26

கதையை படித்து மகிழ்ந்த நண்பர்களே,உங்கள் கருத்துக்களை பதிந்தால் சந்தோசப் படுவேன்.

20 comments:

  1. பல மாத இடைவெளிக்கு பிறகு வந்து இருக்கும் நண்பர் புலா சுலாகி அவர்களே,

    தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்.

    தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  2. நான் இந்த கதையை ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால் தமிழில் படிப்பது முதல் தடவை என்பதால் புதிய அனுபவமாக இருக்கிறது.

    thanks.

    தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  3. பல மாதங்கள் கழித்து வந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. இந்த கதையை நம்ம விஜயன் சாரின் பாஷையில் சொல்வதானால், காதுல பூ.

    ReplyDelete
  5. மோசமான கதையாக இருந்தாலும் பல வண்ணத்தில் படிப்பது ஒரு சுவையே. என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  6. thanks again for the complete scans.

    ReplyDelete
  7. do you have any mandrake stories in tamil?

    what is the next post?

    ReplyDelete
  8. Ammaadi.... Garth was one story I never used to understand in Indrajal as a kid, one due to mystic nature of it and the other being the Cryptic ( Mystic?!) Tamil translation from Indrajal...
    But still it is fun to read the old comics again!. TFS.

    ReplyDelete
  9. yesterday i had the fortune of buying this book in tamil language.

    luacky........

    ReplyDelete
  10. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சுவரஸ்யமான தமிழ் நடையும், முழுக்க வர்ணங்களுமாக இருக்கும் இந்த வகை புத்தகங்கள் என்னிடம் சுமார் 20 இருக்கின்றன. சுவரஸ்யத்தை உருவாக்கும் இந்த கதைகளின் ரசிகன் நான். மிகவும் பிடித்த கதாநாயகர்கள் இந்திய அமைப்பில் வந்த காலம் எல்லாம் உண்டல்லவா. பக்கம் பக்கமாக இந்த கதையை வெளியிட்டு பழைய நினைவுகளை மீட்டதுக்கு நன்றி..

    ReplyDelete
  12. தமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
    தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.

    ReplyDelete
  13. //பக்கம் பக்கமாக இந்த கதையை வெளியிட்டு பழைய நினைவுகளை மீட்டதுக்கு நன்றி.//

    நன்றி முத்துகுமார்.

    ReplyDelete
  14. காமிக்ஸ் நண்பர்களே,

    வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

    புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

    இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
    காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி said...

    பகிர்வுக்கு நன்றி
    March 27, 2010 5:54 PM
    பகிர்ந்தமைக்கு நன்றி said...

    பகிர்ந்தமைக்கு நன்றி


    உங்கள் அன்புக்கு நன்றி.

    ReplyDelete
  16. இந்திர ஜாலில் வந்த காரிகன் மற்றும் ரிப் கெர்பி யின் கதைகள்
    லயன் காமிக்ஸ்இல் வந்ததாக ஞாபகம் உங்களிடம் அவை உள்ளதா இருந்தால்
    அதையும் பதியுங்களேன் நானும் தேடி பார்க்கிறேன்
    இரண்டையும் ஒப்பிட்டால் திரு விஜயன் சார் அவர்கள் தமிழகத்தில் பிறந்தது நமக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் எனலாம்
    அவர் ஒரு வாசகர் கடிதத்துக்கு பதில் தந்தது போல பக்கங்களை கட் செய்யாமல் ஓரி ஜிணலில் உள்ளதை அப்படியே
    நமக்கு தந்துள்ளார் என்பதை புரிந்து கொள்வோம் மேலும் தமிழ் மொழி மாற்றம் மிகவும் அருமையாக இருக்கும்
    மேலும் நவம்பர் மாதத்திற்கு பிறகு வேறு பதிவை இடவில்லை
    ப்ளீஸ் எதாவது செய்யுங்கள்

    ReplyDelete

Related Posts Widget for Blogs by LinkWithin